ராதையின் நெஞ்சம்🕊️


இராதா💕கிருஷ்ணா - 1

நீ தந்த மயக்கங்கள் என்னென்ன...நீ நன்றே அறிவாய்

நீ நானாக, நான் நீயாக கடந்து தான் ஆக வேண்டுமா 🕊️

இந்த நிகழ்கால வாழ்வை 💕

எனக்குள் இருக்கும் 

உயிர் இசையாய்🎵🎼

 உன் குரலின், உன் சிரிப்பின், உன் மகிழ்வின் நினைவுகள்

அடடா...நீ ஒரு நேசகன்🎶

என்னை மயக்கும் வித்தகன்🦋

உன் உரையாடல் தந்த சிலிர்ப்பு 

பெண்மையை நான் என்னில் 

கண்டு வியந்த கணங்கள்😊

புத்தகங்கள் போதுமா உன் புகழ் மாலை நான் பாட,✨

கவிதைகள் ஒன்றே முழுதாய் அறியுமா உன் மீதான என் மொத்த காதலை,✨


 

உனக்காக துடிக்க ஆரம்பித்த இதயம் அதன் பின் வேறு ஒரு சுவாசத்தை சுவாசிக்கவில்லை❤️‍🩹

கடந்து போன காலமா நீ😔

உன் வரவு எனக்கு முற்றுப் புள்ளியா⁉️

இராதைக்குக் கண்ணன் வரவின்றி நிகழ்காலம் என்றும் எதிர்காலம் என்றும் எவ்வாறு கடக்கும்‼️‼️

அவை கால தேவன் அளித்த தீர்ப்போ..

பல யுகங்கள் சேர்ந்து வாழ்ந்து தான் என்னிடம் நீ 

இந்த யுகம் சேர்ந்தாயா கண்ணா♥️

நீ எங்கே எப்படி இருக்கிறாய் 💚

                        


தேக்கி வைத்த காதல் நினைவை இனி நினைத்துக் கடக்கும் காலங்கள்

கூறும் நம் மீதி வாழ்வின் அழகை❤️

ஆறுதல் எனக்கு கூறி, வலியை நீ மட்டும் சுமக்கிறாயா😔

                     ராதை நினைவில் நீ💕

ராதா💕கிருஷ்ணா 

                    தெய்வீகக் காதல் கவிதைகள் 🦋🕊️

No comments

Powered by Blogger.