ராதையின் நெஞ்சம்🕊️
இராதா💕கிருஷ்ணா - 1
நீ தந்த மயக்கங்கள் என்னென்ன...நீ நன்றே அறிவாய்
நீ நானாக, நான் நீயாக கடந்து தான் ஆக வேண்டுமா 🕊️
இந்த நிகழ்கால வாழ்வை 💕
எனக்குள் இருக்கும்
உயிர் இசையாய்🎵🎼
உன் குரலின், உன் சிரிப்பின், உன் மகிழ்வின் நினைவுகள்
அடடா...நீ ஒரு நேசகன்🎶
என்னை மயக்கும் வித்தகன்🦋
உன் உரையாடல் தந்த சிலிர்ப்பு
பெண்மையை நான் என்னில்
கண்டு வியந்த கணங்கள்😊
புத்தகங்கள் போதுமா உன் புகழ் மாலை நான் பாட,✨
கவிதைகள் ஒன்றே முழுதாய் அறியுமா உன் மீதான என் மொத்த காதலை,✨
உனக்காக துடிக்க ஆரம்பித்த இதயம் அதன் பின் வேறு ஒரு சுவாசத்தை சுவாசிக்கவில்லை❤️🩹
கடந்து போன காலமா நீ😔
உன் வரவு எனக்கு முற்றுப் புள்ளியா⁉️
இராதைக்குக் கண்ணன் வரவின்றி நிகழ்காலம் என்றும் எதிர்காலம் என்றும் எவ்வாறு கடக்கும்‼️‼️
அவை கால தேவன் அளித்த தீர்ப்போ..
பல யுகங்கள் சேர்ந்து வாழ்ந்து தான் என்னிடம் நீ
இந்த யுகம் சேர்ந்தாயா கண்ணா♥️
நீ எங்கே எப்படி இருக்கிறாய் 💚
தேக்கி வைத்த காதல் நினைவை இனி நினைத்துக் கடக்கும் காலங்கள்
கூறும் நம் மீதி வாழ்வின் அழகை❤️
ஆறுதல் எனக்கு கூறி, வலியை நீ மட்டும் சுமக்கிறாயா😔
ராதை நினைவில் நீ💕
ராதா💕கிருஷ்ணா


No comments