அன்புள்ள என் அப்பன் முருகனுக்கு 🦚📝



 அன்புள்ள என் அப்பன் முருகனுக்கு...


முருகா...


நான் உன்னிடம் இன்று கூற இருப்பது என் தலையாய நன்றியைத் தான் முருகா...


உயிர் தந்தாய் ! 

உடல் தந்தாய் ! 

நீயே உணவாகவும், மருந்தாகவும் 

தாயும், தந்தையுமாய், 

சொந்தமாய்,

 நட்புகளாய்,

 உயிரின் நாதமாய் வியாபித்து, 

இவ்வுலகினையும் காத்து, 

இந்த உயிரையும் காக்கிறாய்...


எனக்குக் காவலாய் நின்று, என்னைக் கைகளில் தாங்கி 

என் இன்னுயிரைக் காப்பவனே ! என் அய்யனே! நன்றி அப்பா..


உன்னை முருகா என்று அழைப்பதைத்தவிர உனக்காக ஒன்றும் நான் செய்தறியேன்.


என் உயிரான தெய்வமே ..

நன்றி முருகா!



No comments

Powered by Blogger.